இன்று கனவுகள் காணும் நேரம்
இருள் பிரிந்தும் பிரியாத
நீள் சாலை வெளியின்
பனிபோர்வை விலக்கும்
சூரியன்
நேற்றின் நிகழ்வுகளில்
வழிந்து போன வியர்வையின்
மிச்சம் சேகரிக்கும்
போர்வை
எழதுடிக்கும் மனமும்
சம்மதியா மனைவியின் கையும்
மின்விசிறியின் சுழற்சியில்
சிக்கி மரிக்கும் காலம்
கடந்து போகக்கடவது
எல்லாம் எப்போதும்
இறந்து நின்றது காலம்
விழிக்கவேயில்லை இன்னும் நான்
இது கனவுகள் காணும் நேரம்
No comments:
Post a Comment