Sunday, May 23, 2010

பிறப்பின் சூழ்ச்சி

எல்லா பிறப்பும்
சில வரங்கலோடும்
சில சாபங்கலோடும்
ஏற்படுகிறது

நீ காதலிப்பதும்
காதலிக்கபடுவதும்
வரம்கலாகிறது

என்றேனும் ஒரு நாள்
உன் காதல்
மறுக்கப்படுகையில்
நீ சாபங்கள் இன்றி
பிறந்திருக்கலாம்
என்றும்
உன் காதல் மரிக்கையில்
நீ வரங்களே இன்றி
பிறந்திருக்கலாம் என்றும்
தோன்றும்

என் செய்ய
எல்லா பிறப்பும்
சில வரங்களுடனும்
சில சாபங்களுடனும்
ஏற்படுவதாகிறது





Saturday, May 22, 2010

வாழ்வாங்கு வாழ்வதாயின்....

எல்லா கடற்கரை நடையின் முடிவிலும்
நீளமாய் காலம்
நம்முன் நீண்டு போகும்.....................
மணல் மட்டும் மிஞ்சும் கடற்கரை!

என் ஊர்
அநாதை கிராமம்...............
என் தோட்டத்து மாமரம்
பழுத்து குலுங்குகிறது.
யாருக்கும் இல்லாமல்.................

அமைதியாய்
அனால் கடுமையாய் காடு.
கத்தும் காக்கை
உடைத்துப்போட்டது.
சிதறி அழும் மலை..................

சிதறிய துளிகளை
சேர்த்து வந்து அடிக்கி
வீடென்று சொன்னோம் நாம்!!!!!

கைகளை அடித்து விரித்து
அலைந்து திரியும் தும்பி.
யாரும் பிடித்து விடாதீர்கள்..........
அது மட்டும் தான் அங்கு உள்ளது!

வேனல்கால கனவுகள்.........
புதைந்து கிடக்கிறது..............!
தோண்டி எடுக்கத்தான் யாருக்கும் நேரமில்லை!!

காலசுழற்சியில்
அமைதியாய் அரை நொடி அழவேண்டும்
நேரம் இல்லை அதற்கும்!

என் கிராமத்து காதலர்கள்
பேசும் மௌன மொழிகளில்
ரத்தம் சொட்ட சொட்ட
மரித்துபோகிறது
செம்பரித்தி.................
யாருக்கும் சொல்லாமல் !

நானும் நீயும்
இங்கு வாழ்வாங்கு வாழ்கிறோம்!!!!!!!!!!!!!

Thursday, May 20, 2010

கனவுகள் நேரம்

இன்று கனவுகள் காணும் நேரம்
இருள் பிரிந்தும் பிரியாத
நீள் சாலை வெளியின்
பனிபோர்வை விலக்கும்
சூரியன்

நேற்றின் நிகழ்வுகளில்
வழிந்து போன வியர்வையின்
மிச்சம் சேகரிக்கும்
போர்வை

எழதுடிக்கும் மனமும்
சம்மதியா மனைவியின் கையும்
மின்விசிறியின் சுழற்சியில்
சிக்கி மரிக்கும் காலம்

கடந்து போகக்கடவது
எல்லாம் எப்போதும்

இறந்து நின்றது காலம்
விழிக்கவேயில்லை இன்னும் நான்

இது கனவுகள் காணும் நேரம்